Pages

Monday, 13 June 2011

சிலை - art by அன்பு

இது என்னம்மா?


இது சிலை. 

சரி... என்ன காலைக் காணோம்?

 கல்லு இருக்குல்ல.. ம்ம்ம் அது... candle மாதிரி ஒட்டி இருக்கும்
கல்லு மேல ஒட்டி இருக்கும்...

ஓ.. சரி, கையக் காணோம்?

சும்மா சிலை தானே...அதான்!! ok?!

நல்லா  இருக்கும்மா...

Thursday, 2 June 2011

இந்தியர்கள் செவ்விந்தியர்களா?

சமீபத்தில் ஓர் ஓவியரின் வீடியோ விளக்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஓர் இந்திய சிறுமி யை வரைவதாகக் கூறி செவ்விந்தியரைப் போன்று  ஓர் இறகுடன் வரைந்து காண்பித்தார்கள். பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் செவ்விந்தியரையே இந்தியராகக் காண்பிக்கிறார்கள்.

செவ்விந்தியரை பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆசை. cowboy படங்களிலும் மற்ற பிற கொலம்பஸ் - அமெரிக்க கண்டுபிடிப்புகளில் ஆதிவாசித் தோற்றங்களிலும் தான் அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். இப்போது வலையில் தேடும் போது பிடிபட்ட சில அருமையான தகவல்கள் படித்துத் தெரிந்து கொள்ள, உங்களுக்கும்...

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=16402 நன்றிகளுடன்.
http://www.luckylookonline.com/2011/05/blog-post_26.html நன்றிகளுடன்

பின்குறிப்பு: Bob Ross என்ற ஓவியர், தனது வித்தியாசமான துரிதமான ஓவியம் வரையும் கலையில் சிறந்தவர். இவரது ஓவியப் படைப்புகள், அமெரிக்கத் தொலைக்காட்சி  தொடராக (the joy of painting )  நூற்றுக்கணக்கான எபிசோடுகளாக  வெளிவந்ததாம்.

Wednesday, 1 June 2011

Dinosaur and its eggs-art by அன்பு

டைனோசார் முட்டை போட்டு பத்திரமா பார்த்துகிட்டு இருக்கு!

Tuesday, 31 May 2011

Owl -ஆந்தை எப்படி இருக்கு?!


(OWL னு நான் எழுதியதால், அன்பும் அவன் எழுத்தில் பறக்குற owl னு எழுதியிருக்கானாம்!)

animals க்கு ஏன் வால் இருக்கும்மா?



(ஐயோ, வாலை காணாமே!!)



எப்போதும் தூங்க போகும் முன் அவன் கேட்கும் கேள்விகளில் பதில் கூறி எனது தூக்கம் தொலைவதும் உண்டு...

பெரும்பாலும் பூமியைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியே அதிகமாக இருக்கும்...

நாம் பூமிக்குள்ள இருக்கோமா? வெளியிலேயா?

(வெளியில் தாம்மா...)

வெளியில இருந்தா சுத்தும் போது விழ மாட்டோமா? (பூமி சூரியனைச் சுத்தும்னு சொல்லியாச்சுல்ல!)

அப்ப பூமிக்குள்ளே என்ன இருக்கு..?

இப்படியே போகும்....


animals க்கு ஏன் வால் இருக்கும்மா?

எங்க வீட்டு வாலுக்கு, இந்த பெரிய கேள்வி எழுந்தது நேற்று இரவு...

இந்த கேள்விக்கு, நானும், என் அறிவைத் தோண்டி, ஒரு பெரிய விளக்கம் கொடுத்தேன்

வால் இருக்கிறதால தான் மாடு, ஆடு எல்லாம் ஈ, கொசு, பூச்சியெல்லாம் உடம்புல உட்கார்ந்தா விரட்டி விடும், அதுக்கு கை இல்லைல..

நாய்க்குட்டிக்கு, நம்ம பார்த்து பிடிச்சிருந்தா வாலாட்டும், பேச முடியாதுல்ல..

குரங்கு மரத்துல தாவி தாவி ஓடுறதுக்கு...இதுக்கெல்லாம் தான் வால் இருக்குன்னு...

மகனின் பதில்!

சிங்கத்து மேலயுமா பூச்சி பயமில்லாமா உட்காரும்? roar பண்ணி விரட்டிறாதாம்மா? (சிங்கம் மேல் எப்போதும் ஒரு பிரியம் தான், the king of the jungle ன்னு)..


ம்ம்ம்.. எனக்கும் வால் இருந்தா ஜாலியா இருக்கும்மா... பூச்சி வந்தா விரட்டி விடுவேன், பேப்பர் பறக்காம பிடிச்சுக்கிடுவேன்... (அவரு எழுதும் போது என்ன எழுதுவோம்னு கேக்கக் கூடாது, வரையும் போது...)



உங்க வீட்டுக் குட்டிகளுக்கு சொல்ல, நாமும் தெரிந்துக் கொள்ள?

Thursday, 7 April 2011

ஓட்டுப் போடாதே! இப்போதாவது யோசி!

ஓட்டுப் போட்டு என்ன சாதித்து விட்டாய், தோழி/நண்பா? பல திருடரில் ஒரு திருடனைத் தேர்ந்தெடுப்பதில் என்ன பெருமை? உனக்காக குறையொன்றும் தெரியவில்லையெனில், அரசியல்வாதியின் எச்சிலைப் பெற நாயாய் உழைக்கும் கலையுலகு (அதான், தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை உலக மகா நடிகர்கள்)கூறும் கட்சி/வேட்பாளரின் இனிய சாதனைகள்/எதிர்க்கட்சியினரின் மீதான விமர்சனங்களைக் கேள் போதும்! நாறுகிறது தமிழ்நாடே! நம் நலனுக்காகவா, இத்தனை கூட்டங்கள், தொண்டை கிழிய முழக்கங்கள், வெயிலில் வாடி ஓட்டுப் பிச்சைகள்... புல்லரிக்கிறது!!

அப்படியும் போதவில்லையா... இதையாவது படியுங்கள்!

நன்றிகள் பல பதிவருக்கு...

Wednesday, 6 April 2011

அது என்ன மூலியம்?

கேட்க சகிக்கவில்லை இந்த வார்த்தையை... தமிழை எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம், புதிதாக இந்த ஒரு வார்த்தை, மூலம் என்பதற்கு மூலியம் என்று அனைவரும், குறிப்பாக ஊடகத்தில் தான் அதிகம் பேசிக் கேட்க வேண்டி இருக்கிறது.


எவ்வளவோ பொறுத்துட்டோம்... இதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தானா?