Pages

Showing posts with label animal's tail. Show all posts
Showing posts with label animal's tail. Show all posts

Tuesday, 31 May 2011

animals க்கு ஏன் வால் இருக்கும்மா?



(ஐயோ, வாலை காணாமே!!)



எப்போதும் தூங்க போகும் முன் அவன் கேட்கும் கேள்விகளில் பதில் கூறி எனது தூக்கம் தொலைவதும் உண்டு...

பெரும்பாலும் பூமியைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியே அதிகமாக இருக்கும்...

நாம் பூமிக்குள்ள இருக்கோமா? வெளியிலேயா?

(வெளியில் தாம்மா...)

வெளியில இருந்தா சுத்தும் போது விழ மாட்டோமா? (பூமி சூரியனைச் சுத்தும்னு சொல்லியாச்சுல்ல!)

அப்ப பூமிக்குள்ளே என்ன இருக்கு..?

இப்படியே போகும்....


animals க்கு ஏன் வால் இருக்கும்மா?

எங்க வீட்டு வாலுக்கு, இந்த பெரிய கேள்வி எழுந்தது நேற்று இரவு...

இந்த கேள்விக்கு, நானும், என் அறிவைத் தோண்டி, ஒரு பெரிய விளக்கம் கொடுத்தேன்

வால் இருக்கிறதால தான் மாடு, ஆடு எல்லாம் ஈ, கொசு, பூச்சியெல்லாம் உடம்புல உட்கார்ந்தா விரட்டி விடும், அதுக்கு கை இல்லைல..

நாய்க்குட்டிக்கு, நம்ம பார்த்து பிடிச்சிருந்தா வாலாட்டும், பேச முடியாதுல்ல..

குரங்கு மரத்துல தாவி தாவி ஓடுறதுக்கு...இதுக்கெல்லாம் தான் வால் இருக்குன்னு...

மகனின் பதில்!

சிங்கத்து மேலயுமா பூச்சி பயமில்லாமா உட்காரும்? roar பண்ணி விரட்டிறாதாம்மா? (சிங்கம் மேல் எப்போதும் ஒரு பிரியம் தான், the king of the jungle ன்னு)..


ம்ம்ம்.. எனக்கும் வால் இருந்தா ஜாலியா இருக்கும்மா... பூச்சி வந்தா விரட்டி விடுவேன், பேப்பர் பறக்காம பிடிச்சுக்கிடுவேன்... (அவரு எழுதும் போது என்ன எழுதுவோம்னு கேக்கக் கூடாது, வரையும் போது...)



உங்க வீட்டுக் குட்டிகளுக்கு சொல்ல, நாமும் தெரிந்துக் கொள்ள?