Pages

Tuesday 25 January 2011

விவசாயப் படிப்பு!

சிறுவயது முதல் படிப்பதில் ஆர்வம் உண்டு. காலையில் செய்தித் தாளுடன் வரும் சிறுவர்மணியைப் படிக்க அண்ணன் அக்காவுடன் போட்டியைத் தொடங்கி, வார, மாத இதழ்களுக்காக அதிகாலையில் (அன்று மட்டும்) எழுந்து காத்திருந்ததில் தொடர்ந்த வாசிப்பு. (முதலில் யார் படிப்பது என்பது தான் போட்டி!). இன்று கண்ணாலும் காண முடியாத பூந்தளிர், அம்புலி மாமா, பாலமித்ரா போன்ற சிறுவர் இதழ்களை நினைத்தாலே அந்த இனிய காலம் வரிசையாய் நினைவில் வந்து போகிறது. ஒருபக்கம் பெருமையாகவும் இப்போதுள்ள குழந்தைகள் படிக்கும் பழக்கமே இல்லாததில் வருத்தமும் உண்டாகிறது. கல்லூரி மாணவரும் தமிழைத் தள்ளாட வைக்கிறார்கள்!

அப்பா இலக்கிய அரசியல் நூல்களையும், அம்மா நடைமுறை நூல்களையும் விடாது படித்ததால், எங்களுக்கும் படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பள்ளிப்படிப்பு வரை இனிதே தொடர்ந்தது. பாடப் புத்தககங்களை விட அதிகம் புரட்டியது மற்ற நல்ல புத்தககங்களைத் தான்.

கல்லூரிப் படிப்பு வேளாண் கல்லூரியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் புல்லுக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத போதும், அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்து, வீட்டில் அரிசி, பருப்பு,முருங்கை எல்லாம் Oriza sativa, Cajanus cajan, Moringa ஆயிற்று. கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்தது.

பிறகு கற்றுக்கொள்வதில் ஆர்வத்தைத் தடை செய்ய வந்தது, record writing! ஒவ்வொரு semester க்கும் குறைந்தது 10 subjects. ஐந்தாறு பாடங்களுக்காவது record எழுத வேண்டும். ஆரம்பத்தில் சுயமாக எழுதி, பிறகு, கடமைக்கு copy அடிக்க மட்டுமே நேரம் இருந்தது... இதில் ragging, strike, நண்பர்கள், (தோழிகள் மட்டும் தான், அப்படியே சில ஆண் நண்பர்களுடன் பழகினாலும், very restricted, very poor environment).etc., ஆண்களுடன் பழகினாலே தவறு தான், என்பது போன்ற மாயை, நன்றாக பழகினால், எதிர்வாதம் செய்தால், வழிசல் அல்லது, திமிர் பிடித்தவள் பட்டம் தான். some exceptions were also there. பாடங்களை படிக்க மட்டும் வெறுப்பு, அதுவும், notes தேடி படிப்பதில். நூலகம் சென்று பிற புத்தககங்கள், notes தவிர்த்து, பாட சம்பந்தமான நூல்கள் படிப்பதில் மட்டுமே ஓரளவு அறிவு பெற முடிந்தது.

செயல்முறை பாட வகுப்புகளிலும், SCIENTIFIC NAMES ஐ மனப்பாடம் செய்வதில் எப்போதும் தடுமாற்றம் தான். அதிலும், தேர்வு நேரத்தில் minor insects உடைய scientific names ஐ என்னிடம் வந்து கேட்டுப் பயமுறுத்தும் சில தோழிகளும் உண்டு! நான்கு ஆண்டுப் படிப்பில் எந்நேரமும் மற்ற ஆண்டு மாணவருக்கோ, எங்களுக்கோ மிட் செமஸ்டர், செமஸ்டர், செயல்முறைத் தேர்வு என்று நடந்துக் கொண்டே இருப்பதால் தினமும் வகுப்புக்குச் செல்வது போலத் தான் என் போன்றவர்களுக்கு. ஆனால் இரவு முழுதும் தூங்காமல் படித்துக் கொண்டிருக்கும் தோழிகளைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், (எனக்குக்) களைப்பாகவும் இருக்கும்!
இதற்காகவே முதுநிலையில் நேரடி அறிவியல் இல்லாத பாடத்தை (வேளாண் விரிவாக்கம்) எடுத்துப் படித்துத் திருப்தியடைந்தேன். நண்பர்களும் சரியாகவே அமைந்தனர். பாடத்திட்டமும், நமது தனித்துவத்தை உணர ஓரளவு வழிசெய்தது.

ஆனால் விவசாயப் படிப்பு முடித்து விட்டால் அனைத்தும் தெரிந்து நேரடியாக விவசாயத்தில் மூழ்கிவிட முடியாது என்பது என்னுடைய உறுதியான கருத்து (விவசாய குடும்பப் பின்னணி அன்றி).ஆனால் என் போன்ற விவசாய குடும்பத்தைச் சாராதோர், அடிப்படை அறிவு பெற,பல்வேறு துறைகளில் அடிப்படை அறிவுடன் எளிதில் புரிந்துக் கொள்ள நிச்சயம் உதவும். இன்னும் செயல்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயற்கை வேளாண் முறைக்கு மட்டுமே வழிவகை செய்தால், நாட்டுக்கும் நல்லது, இளையரும் வேளாண்மைக் கல்விக்கு மரியாதை செய்து (போட்டித் தேர்வுக்காக மட்டும் வேளாண் கல்வியைப் பயன்படுத்தாமல்) உண்மையான வேளாண் புரட்சிக்கு வழிகோலுவார்கள்.

Tuesday 11 January 2011

சென்னை!

சென்னை! 2002 ல் சென்னைக்கு வேலை கிடைத்து வந்த புதிதில் நன்றாய்த் தான் இருந்தது! அக்கா வீட்டில் இருந்து எல்லா வகை போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி (வீட்டிலிருந்து மிதிவண்டியில் ரயில் நிலையம், ரயிலில் இருந்து இறங்கி பேருந்து பிடித்து அலுவலகத்தின் சற்று அ ருகில் இருந்த நிறுத்ததில் இறங்கி 15 நிமிட நடை) பல மாதங்கள் வந்த போது, கொஞ்ச கொஞ்சமாய் முதல் மாதத்தில் இருந்த உற்சாகம் படிப்படியாய் குறைந்த்து. ஆனால் இங்குள்ள அனைவருக்கும் அனேகமாக இந்த நிலை தான் என்று அறிந்த போது என்னையும் இணைத்துக் கொண்டேன்.

பிறகு, அலுவலகத்தின் அருகிலேயெ ஒரு நல்ல ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் சென்ற போது சென்னை நல்ல ஊருதாம்ப்பா என்று தோன்றியது!


வாடகை வீடு!

அம்மா அப்பா ஓய்வுக்குப் பிறகு, அவர்களுடன் வேளச்சேரியில் ஒரு வீட்டில் இருந்தேன். அம்மாவின் அருமையான சாப்பாடு, இன்னும் தெம்பாக்கியது! அப்போது, சொன்னால் நம்ப மாட்டீங்க, ரூ.1700 தான் நல்ல இடவசதியுடன், ஓரறை வீடு! அப்போது தான் வந்தாங்கப்பா நம்ம software மக்கள், ஊக வணிகம்.. போன்ற மற்றும் பல காரணிகள்! காய்கறியில் இருந்து வீட்டு வாடகை வரை ராக்கெட் வேகத்தில் பறந்தது! ஒரு வருடத்தில் பலமுறை வாடகை ஏற்றுவது பற்றித் தான் வீட்டுச் சொந்தக்காரர் அதிகம் பேசினார். வாடகை ரூ.3500 ஆனது. (இப்போது நிச்சயம் ரூ. 10000 ஐ தொட்டிருக்கும்). அப்போதெ வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம், லோன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்ற வேட்கை அதிகம் ஆனது. (வாடகைத் தொகைக்குப் பதிலாக லோன் அடைத்து வந்தால்,... அதில் உள்ள பிரச்சினைகள் பிறகு!)

திருமணம், குழந்தை..

இடையில் இனிதே திருமணம். திருமணத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்ததால், வேலைக்கும், சென்னைக்கும் ஒரு bye! தற்காலிகமாக!! பிறகு குழந்தைக்காக மதுரையில் பல மாதங்கள். பிறகு கதார் நாட்டில் 8 மாதங்கள், அன்புக்கு(அன்பு மகன்! ), நான்கு மாதங்களே ஆனதாலும், அங்கு பேருந்து போக்குவரத்து அதிகம் இல்லாததாலும், எங்கு செல்லவும் யாரையாவது எதிர்ப்பார்க்க வேண்டியிருந்ததாலும் (கணவரும் காலை 5 மணிக்கு கிளம்பியவர் மாலை 7 மணிக்குத்தான் வர முடியும்) தோஹா பிடிக்கவில்லை! ஆரம்பத்தில் நம் நாட்டவர் யாருமில்லை. பக்கத்து வீட்டு சீனக்குடும்பத்தினரையும் அவ்வப்போது பார்த்து சிரித்து hi, hello மட்டும் தான்! நல்ல வேளையாக ஒரு தமிழ் நாட்டு புதுமண தம்பதி எதிர் வீட்டில் வந்ததால் பெரிய ஆறுதல் பெண்கள் இருவருக்கும்!

மீண்டும் சென்னை..

மடிப்பாக்கத்தில் இருமுறை வீடு மாற்றம்... மீண்டும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம். திரும்பவும் சென்னை. மற்ற நாடுகளில் இருக்கும் போதாவது ஒரு சில இந்திய குடும்பங்கள் மட்டுமே இருந்தாலும், நல்ல நட்புடன் இருக்க முடிந்தது. சென்னையில் பழைய நண்பர்கள் தொலைவில், அக்கம் பக்கத்தார் புன்னகைக்க கூட முடியாத நிலையில் 'gated community' யாக இருப்பதால் வெறுமையாகவே இருக்கிறது, அதுவும், என் போன்ற வேலைக்குச் செல்ல இயலாத பெண்களுக்கும், விளையாட ஆள் இல்லாத குழந்தைகளுக்கும்!. விலைவாசியுடன், வாடகையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்னால் 40 லட்சங்களில் இருந்த 1 கிரவுண்ட் இப்போது 60, 70 களில்...(உங்களுக்குப் புரிந்திருக்கும் சென்னையின் புறப்பகுதிகளில் தான்!). சென்னையில் வீடு இன்னும் எட்டாக் கனியாகவே! இப்போதைக்கு நிலம் மட்டும் வாங்கலாம் என்றால் அதற்கு பணமும், காலமும் இல்லை.இப்போது நான்காவது முறையாக சென்னைக்கும், அயல் நாடுகளுக்கும் ஊசலாட்டம்! திரும்பவும் சென்னைக்கு ஒரு bye!

இது எல்லாம் பல சுகங்களை தியாகம் செய்து, போராடி, ஒரளவு சம்பாரித்து சிக்கனமாக வாழ நினைத்து இருக்கும் எங்களைப் போன்ற நடுத்தர மக்களின் நிலை. தினமும் போராடி வாழும் மக்களை நினைத்தால் கவலையும், ஆச்சரியமும் ஒருங்கே எழுவதோடு, நிலையை உயர்த்த ஒன்றும் செய்ய இயலாத நமது கையாலாகாத தனத்தால் வெட்கமும் ஏற்படுகிறது!

கோவா

கோவா,கடற்கரைகளால் அழகு படுத்தப்பட்ட அழகிய மாநிலம். ஆரவாரமான கடற்கரைகளும் அமைதியான இயற்கையழகும் நிறைந்து மனதிற்கு புத்துணர்வூட்டுகிறது! போர்த்துகீசியர்களின் நினைவூட்டும் பழமையும், புதுமையும் நிறைந்த நகரம். இப்போது, அயல் நாட்டவரில் பெரும்பாலும் ரஷ்ய நாட்டு மக்களின் வருகை அதிகமாம். அதனால், உள்ளூர் மக்களும், விளம்பர பலகைகளும் ரஷ்ய மொழி பேசுகின்றன(ர்)

சமீபத்தில் கோவாவிற்கு சென்ற போது, புத்தாண்டு கொண்டாட்டங்களில் மாட்டிக் கொண்டோம்!கோவா, அயல் நாட்டினருக்கு சொர்க்கபுரி என்று சொல்கிறார்கள். ஆனால் நமது இளைஞர் பட்டாளத்தினருக்கோ சொர்க்கத்தை மட்டும் மலிவு விலையில் (சொர்க்கம்=மது) அள்ளித்தரும் ஊராகவே இருக்கிறது. இயற்கை அழகை அள்ளிப் பருகி, உள்ளமும் உடலும் உறுதி பெறுவதற்காக வெளி நாட்டினர் அமைதியான கடற்கரையோரங்களை நாடும் போது, நமது மக்கள், போதையிலும், ஆட்டங்களிலும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். ‘குடி’மக்களைக் காக்க அரசு எவ்வளவோ டாஸ்மாக் கடைகளை ஒவ்வொரு அடியிலும் வைத்த போதும், கோவா அரசுக்கே லாபம்!! இதற்கு ஒரு தடை சட்டம் போடலாம், தமிழக அரசு (மேலிடத்தைச் சந்தித்து)!!

இயற்கை அழகு கொஞ்சும் கோவாவில், வழக்கம் போல சுற்றுலாக் கழகம் ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒழுங்கு முறையும் கிடையாது! எங்கும் வசதியின்மை. எந்த பொருளை எடுத்தாலும் MRP யை போல் இருமடங்கு விலை. அப்படியிருந்தாலும் நல்ல தரமான பொருட்கள் கிடைப்பதில்லை!! ஒரு பார்லே ஜி சின்ன பாக்கெட் மட்டும் தான் கிடைத்தது எங்கள் மகன் சாப்பிட கேட்டு அழுத போது, 5 ரூபாய் பாக்கெட் 10 ரூபாய்க்கு, அதுவும் வட கோவா பகுதியில், முக்கிய சுற்றுலா தளமான டால்பின் பாய்ண்ட்டில்!

தங்கிய இடம் முதல் போக்குவரத்து வசதி வரை ரொம்ப மோசமான அனுபவமே கிடைத்தது, ஆனாலும் இன்னும் ஒரு முறை சீசன் இல்லாத போது, நல்ல வானிலையில் சென்று இயற்கை அழகைப் பருக ஆசை!!