Pages

Tuesday 11 January 2011

கோவா

கோவா,கடற்கரைகளால் அழகு படுத்தப்பட்ட அழகிய மாநிலம். ஆரவாரமான கடற்கரைகளும் அமைதியான இயற்கையழகும் நிறைந்து மனதிற்கு புத்துணர்வூட்டுகிறது! போர்த்துகீசியர்களின் நினைவூட்டும் பழமையும், புதுமையும் நிறைந்த நகரம். இப்போது, அயல் நாட்டவரில் பெரும்பாலும் ரஷ்ய நாட்டு மக்களின் வருகை அதிகமாம். அதனால், உள்ளூர் மக்களும், விளம்பர பலகைகளும் ரஷ்ய மொழி பேசுகின்றன(ர்)

சமீபத்தில் கோவாவிற்கு சென்ற போது, புத்தாண்டு கொண்டாட்டங்களில் மாட்டிக் கொண்டோம்!கோவா, அயல் நாட்டினருக்கு சொர்க்கபுரி என்று சொல்கிறார்கள். ஆனால் நமது இளைஞர் பட்டாளத்தினருக்கோ சொர்க்கத்தை மட்டும் மலிவு விலையில் (சொர்க்கம்=மது) அள்ளித்தரும் ஊராகவே இருக்கிறது. இயற்கை அழகை அள்ளிப் பருகி, உள்ளமும் உடலும் உறுதி பெறுவதற்காக வெளி நாட்டினர் அமைதியான கடற்கரையோரங்களை நாடும் போது, நமது மக்கள், போதையிலும், ஆட்டங்களிலும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். ‘குடி’மக்களைக் காக்க அரசு எவ்வளவோ டாஸ்மாக் கடைகளை ஒவ்வொரு அடியிலும் வைத்த போதும், கோவா அரசுக்கே லாபம்!! இதற்கு ஒரு தடை சட்டம் போடலாம், தமிழக அரசு (மேலிடத்தைச் சந்தித்து)!!

இயற்கை அழகு கொஞ்சும் கோவாவில், வழக்கம் போல சுற்றுலாக் கழகம் ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒழுங்கு முறையும் கிடையாது! எங்கும் வசதியின்மை. எந்த பொருளை எடுத்தாலும் MRP யை போல் இருமடங்கு விலை. அப்படியிருந்தாலும் நல்ல தரமான பொருட்கள் கிடைப்பதில்லை!! ஒரு பார்லே ஜி சின்ன பாக்கெட் மட்டும் தான் கிடைத்தது எங்கள் மகன் சாப்பிட கேட்டு அழுத போது, 5 ரூபாய் பாக்கெட் 10 ரூபாய்க்கு, அதுவும் வட கோவா பகுதியில், முக்கிய சுற்றுலா தளமான டால்பின் பாய்ண்ட்டில்!

தங்கிய இடம் முதல் போக்குவரத்து வசதி வரை ரொம்ப மோசமான அனுபவமே கிடைத்தது, ஆனாலும் இன்னும் ஒரு முறை சீசன் இல்லாத போது, நல்ல வானிலையில் சென்று இயற்கை அழகைப் பருக ஆசை!!

No comments:

Post a Comment