Pages

Tuesday 11 January 2011

சென்னை!

சென்னை! 2002 ல் சென்னைக்கு வேலை கிடைத்து வந்த புதிதில் நன்றாய்த் தான் இருந்தது! அக்கா வீட்டில் இருந்து எல்லா வகை போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி (வீட்டிலிருந்து மிதிவண்டியில் ரயில் நிலையம், ரயிலில் இருந்து இறங்கி பேருந்து பிடித்து அலுவலகத்தின் சற்று அ ருகில் இருந்த நிறுத்ததில் இறங்கி 15 நிமிட நடை) பல மாதங்கள் வந்த போது, கொஞ்ச கொஞ்சமாய் முதல் மாதத்தில் இருந்த உற்சாகம் படிப்படியாய் குறைந்த்து. ஆனால் இங்குள்ள அனைவருக்கும் அனேகமாக இந்த நிலை தான் என்று அறிந்த போது என்னையும் இணைத்துக் கொண்டேன்.

பிறகு, அலுவலகத்தின் அருகிலேயெ ஒரு நல்ல ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் சென்ற போது சென்னை நல்ல ஊருதாம்ப்பா என்று தோன்றியது!


வாடகை வீடு!

அம்மா அப்பா ஓய்வுக்குப் பிறகு, அவர்களுடன் வேளச்சேரியில் ஒரு வீட்டில் இருந்தேன். அம்மாவின் அருமையான சாப்பாடு, இன்னும் தெம்பாக்கியது! அப்போது, சொன்னால் நம்ப மாட்டீங்க, ரூ.1700 தான் நல்ல இடவசதியுடன், ஓரறை வீடு! அப்போது தான் வந்தாங்கப்பா நம்ம software மக்கள், ஊக வணிகம்.. போன்ற மற்றும் பல காரணிகள்! காய்கறியில் இருந்து வீட்டு வாடகை வரை ராக்கெட் வேகத்தில் பறந்தது! ஒரு வருடத்தில் பலமுறை வாடகை ஏற்றுவது பற்றித் தான் வீட்டுச் சொந்தக்காரர் அதிகம் பேசினார். வாடகை ரூ.3500 ஆனது. (இப்போது நிச்சயம் ரூ. 10000 ஐ தொட்டிருக்கும்). அப்போதெ வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம், லோன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்ற வேட்கை அதிகம் ஆனது. (வாடகைத் தொகைக்குப் பதிலாக லோன் அடைத்து வந்தால்,... அதில் உள்ள பிரச்சினைகள் பிறகு!)

திருமணம், குழந்தை..

இடையில் இனிதே திருமணம். திருமணத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்ததால், வேலைக்கும், சென்னைக்கும் ஒரு bye! தற்காலிகமாக!! பிறகு குழந்தைக்காக மதுரையில் பல மாதங்கள். பிறகு கதார் நாட்டில் 8 மாதங்கள், அன்புக்கு(அன்பு மகன்! ), நான்கு மாதங்களே ஆனதாலும், அங்கு பேருந்து போக்குவரத்து அதிகம் இல்லாததாலும், எங்கு செல்லவும் யாரையாவது எதிர்ப்பார்க்க வேண்டியிருந்ததாலும் (கணவரும் காலை 5 மணிக்கு கிளம்பியவர் மாலை 7 மணிக்குத்தான் வர முடியும்) தோஹா பிடிக்கவில்லை! ஆரம்பத்தில் நம் நாட்டவர் யாருமில்லை. பக்கத்து வீட்டு சீனக்குடும்பத்தினரையும் அவ்வப்போது பார்த்து சிரித்து hi, hello மட்டும் தான்! நல்ல வேளையாக ஒரு தமிழ் நாட்டு புதுமண தம்பதி எதிர் வீட்டில் வந்ததால் பெரிய ஆறுதல் பெண்கள் இருவருக்கும்!

மீண்டும் சென்னை..

மடிப்பாக்கத்தில் இருமுறை வீடு மாற்றம்... மீண்டும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம். திரும்பவும் சென்னை. மற்ற நாடுகளில் இருக்கும் போதாவது ஒரு சில இந்திய குடும்பங்கள் மட்டுமே இருந்தாலும், நல்ல நட்புடன் இருக்க முடிந்தது. சென்னையில் பழைய நண்பர்கள் தொலைவில், அக்கம் பக்கத்தார் புன்னகைக்க கூட முடியாத நிலையில் 'gated community' யாக இருப்பதால் வெறுமையாகவே இருக்கிறது, அதுவும், என் போன்ற வேலைக்குச் செல்ல இயலாத பெண்களுக்கும், விளையாட ஆள் இல்லாத குழந்தைகளுக்கும்!. விலைவாசியுடன், வாடகையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்னால் 40 லட்சங்களில் இருந்த 1 கிரவுண்ட் இப்போது 60, 70 களில்...(உங்களுக்குப் புரிந்திருக்கும் சென்னையின் புறப்பகுதிகளில் தான்!). சென்னையில் வீடு இன்னும் எட்டாக் கனியாகவே! இப்போதைக்கு நிலம் மட்டும் வாங்கலாம் என்றால் அதற்கு பணமும், காலமும் இல்லை.இப்போது நான்காவது முறையாக சென்னைக்கும், அயல் நாடுகளுக்கும் ஊசலாட்டம்! திரும்பவும் சென்னைக்கு ஒரு bye!

இது எல்லாம் பல சுகங்களை தியாகம் செய்து, போராடி, ஒரளவு சம்பாரித்து சிக்கனமாக வாழ நினைத்து இருக்கும் எங்களைப் போன்ற நடுத்தர மக்களின் நிலை. தினமும் போராடி வாழும் மக்களை நினைத்தால் கவலையும், ஆச்சரியமும் ஒருங்கே எழுவதோடு, நிலையை உயர்த்த ஒன்றும் செய்ய இயலாத நமது கையாலாகாத தனத்தால் வெட்கமும் ஏற்படுகிறது!

No comments:

Post a Comment