Pages

Tuesday 25 January 2011

விவசாயப் படிப்பு!

சிறுவயது முதல் படிப்பதில் ஆர்வம் உண்டு. காலையில் செய்தித் தாளுடன் வரும் சிறுவர்மணியைப் படிக்க அண்ணன் அக்காவுடன் போட்டியைத் தொடங்கி, வார, மாத இதழ்களுக்காக அதிகாலையில் (அன்று மட்டும்) எழுந்து காத்திருந்ததில் தொடர்ந்த வாசிப்பு. (முதலில் யார் படிப்பது என்பது தான் போட்டி!). இன்று கண்ணாலும் காண முடியாத பூந்தளிர், அம்புலி மாமா, பாலமித்ரா போன்ற சிறுவர் இதழ்களை நினைத்தாலே அந்த இனிய காலம் வரிசையாய் நினைவில் வந்து போகிறது. ஒருபக்கம் பெருமையாகவும் இப்போதுள்ள குழந்தைகள் படிக்கும் பழக்கமே இல்லாததில் வருத்தமும் உண்டாகிறது. கல்லூரி மாணவரும் தமிழைத் தள்ளாட வைக்கிறார்கள்!

அப்பா இலக்கிய அரசியல் நூல்களையும், அம்மா நடைமுறை நூல்களையும் விடாது படித்ததால், எங்களுக்கும் படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பள்ளிப்படிப்பு வரை இனிதே தொடர்ந்தது. பாடப் புத்தககங்களை விட அதிகம் புரட்டியது மற்ற நல்ல புத்தககங்களைத் தான்.

கல்லூரிப் படிப்பு வேளாண் கல்லூரியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் புல்லுக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத போதும், அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்து, வீட்டில் அரிசி, பருப்பு,முருங்கை எல்லாம் Oriza sativa, Cajanus cajan, Moringa ஆயிற்று. கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்தது.

பிறகு கற்றுக்கொள்வதில் ஆர்வத்தைத் தடை செய்ய வந்தது, record writing! ஒவ்வொரு semester க்கும் குறைந்தது 10 subjects. ஐந்தாறு பாடங்களுக்காவது record எழுத வேண்டும். ஆரம்பத்தில் சுயமாக எழுதி, பிறகு, கடமைக்கு copy அடிக்க மட்டுமே நேரம் இருந்தது... இதில் ragging, strike, நண்பர்கள், (தோழிகள் மட்டும் தான், அப்படியே சில ஆண் நண்பர்களுடன் பழகினாலும், very restricted, very poor environment).etc., ஆண்களுடன் பழகினாலே தவறு தான், என்பது போன்ற மாயை, நன்றாக பழகினால், எதிர்வாதம் செய்தால், வழிசல் அல்லது, திமிர் பிடித்தவள் பட்டம் தான். some exceptions were also there. பாடங்களை படிக்க மட்டும் வெறுப்பு, அதுவும், notes தேடி படிப்பதில். நூலகம் சென்று பிற புத்தககங்கள், notes தவிர்த்து, பாட சம்பந்தமான நூல்கள் படிப்பதில் மட்டுமே ஓரளவு அறிவு பெற முடிந்தது.

செயல்முறை பாட வகுப்புகளிலும், SCIENTIFIC NAMES ஐ மனப்பாடம் செய்வதில் எப்போதும் தடுமாற்றம் தான். அதிலும், தேர்வு நேரத்தில் minor insects உடைய scientific names ஐ என்னிடம் வந்து கேட்டுப் பயமுறுத்தும் சில தோழிகளும் உண்டு! நான்கு ஆண்டுப் படிப்பில் எந்நேரமும் மற்ற ஆண்டு மாணவருக்கோ, எங்களுக்கோ மிட் செமஸ்டர், செமஸ்டர், செயல்முறைத் தேர்வு என்று நடந்துக் கொண்டே இருப்பதால் தினமும் வகுப்புக்குச் செல்வது போலத் தான் என் போன்றவர்களுக்கு. ஆனால் இரவு முழுதும் தூங்காமல் படித்துக் கொண்டிருக்கும் தோழிகளைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், (எனக்குக்) களைப்பாகவும் இருக்கும்!
இதற்காகவே முதுநிலையில் நேரடி அறிவியல் இல்லாத பாடத்தை (வேளாண் விரிவாக்கம்) எடுத்துப் படித்துத் திருப்தியடைந்தேன். நண்பர்களும் சரியாகவே அமைந்தனர். பாடத்திட்டமும், நமது தனித்துவத்தை உணர ஓரளவு வழிசெய்தது.

ஆனால் விவசாயப் படிப்பு முடித்து விட்டால் அனைத்தும் தெரிந்து நேரடியாக விவசாயத்தில் மூழ்கிவிட முடியாது என்பது என்னுடைய உறுதியான கருத்து (விவசாய குடும்பப் பின்னணி அன்றி).ஆனால் என் போன்ற விவசாய குடும்பத்தைச் சாராதோர், அடிப்படை அறிவு பெற,பல்வேறு துறைகளில் அடிப்படை அறிவுடன் எளிதில் புரிந்துக் கொள்ள நிச்சயம் உதவும். இன்னும் செயல்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயற்கை வேளாண் முறைக்கு மட்டுமே வழிவகை செய்தால், நாட்டுக்கும் நல்லது, இளையரும் வேளாண்மைக் கல்விக்கு மரியாதை செய்து (போட்டித் தேர்வுக்காக மட்டும் வேளாண் கல்வியைப் பயன்படுத்தாமல்) உண்மையான வேளாண் புரட்சிக்கு வழிகோலுவார்கள்.

No comments:

Post a Comment