Pages

Monday 14 March 2011

ஜப்பான்!

ஜப்பான்-என்னைப் போல் பலருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் இந்நாட்டைப் பிடிக்கும் என்று நினைக்கிறேன், முக்கியமாக மக்களின் சுறுசுறுப்பு, நேரம் தவறாமை, மரியாதை, தொழில் நுட்ப அறிவு ஆகிய பல காரணங்களுக்காக...


ஜப்பான், ஆறாயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ‘உதிக்கும் சூரிய நாடு’. உலகின் மூத்த குடிமக்களைக் கொண்ட, மிகக் குறைந்த ‘குழந்தை இறப்பு விகிதம்’ உடைய, கொலை பாதககங்கள் (சிங்கப்பூருக்கு அடுத்து) அற்ற நாடாக திகழும் ஜப்பான், இயற்கையின் சீற்றத்தால் அவ்வப்போது நிலைகுலைந்து போவது வழக்கம்.வீடுகளையும் அனைத்துக் கட்டடங்களையும் அதற்கேற்ப சரியான முறையில் வடிவமைத்து தற்காத்து வந்தனர்.



இரண்டாம் உலகப்போரின் போது உலகின் ‘நாட்டாமை’ என்று நினைக்கும் அமெரிக்கா குட்டிப் பையன்(Little boy in Hiroshima), குண்டு மனிதன் (Fat man in Nagasaki) என்ற இரண்டு அணு ஆயுதங்களை கொண்டு பல்லாயிரக்கணக்கான ஜப்பானியரைக் கொன்று குவித்தது. அந்த வீழ்ச்சியில் இருந்தும் மீண்டு வாழ்ந்து காட்டினர்.


ஆனால், இந்தமுறை இயற்கை மீண்டும் கொடுமைப் படுத்துகிறது. நினைத்தும் பார்க்க முடியாத இயற்கையின் கொடுர விளையாட்டு. கூடுதலாக அவர்கள் நிர்மாணித்த அணு உலைகளின் விபரீத விளைவுகள்... இவை நிச்சயம் அனைத்து நாடுகளுக்கும் அனுபவ எடுத்துக்காட்டு.


அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்ட நாட்டிற்கே இந்நிலைமை எனில், 20 அணு உலைகள் உள்ள இந்தியா என்ன செய்யப் போகிறது?


No comments:

Post a Comment