Pages

Thursday 20 April 2017

Garlic Crescent!

Do you know which smiley face, it represents?.. you will be surprised! My daughter discovered this while helping me to peel the garlic pods!!, (She is nearing 5 years!☺)

Monday 17 April 2017

Rainbow Bird



Friday 7 April 2017

Save endangered fish- Anbu

Many types of fishes are now endangered. For example, we eat 101 million tonnes of large predators like Tuna and sharks. And fishes?!! they only kill 7 people in a year approximately.


Fun Filled Friday!

Hi all!

It's a fun filled Friday Activity! Hope almost everyone is  happily spending time on your vacation. Why don't you learn a simple activity for a fun filled Friday!

Let's make a tornado inside a bottle..

Fun step 1
Take an empty clean plastic bottle of your choice, but must be a transparent one..yup! it must be visible!

Fun step 2

Fill three quarters of the plastic bottle with water.
You can add a pinch of glitter and a few drops of dish-washing liquid. But it's optional.

Fun step 3

Just hold the bottle with your hands on top and bottom, keep the bottle horizontally and bring close to your chest and just spin and immediately bring back to vertical position. Yeah!!! You’ve done it! Tornado in your bottle!


Please watch the video for better understanding. https://youtu.be/73oPtSpe8_Y

It's an exciting and fun activity to my kids and their friends to make a tornado inside a bottle..yes you can make this happen in your water bottle whenever it is three quarters full. Parents, note! Your kids will drink water and fill their water bottle often, to quench their thirst for fun!! ( Note: NO glitter and dish-wash liquid should be added!!)

SCIENCE BEHIND THIS ACTIVITY
Tornado in the bottle is created by the water vortex, a whirling mass of water that sucks everything near it towards its center. while spinning the bottle in a circular motion creates water vortex that looks like a mini tornado.

hope you had a great fun doing this.

Take care.. Have a nice day!

Saturday 17 September 2011

பெண்...

There will never be a generation of great men until there has been a generation of free women -- of free mothers - Robert G. Ingersoll
பெண்கள் குறித்து பல பழமொழிகளும், சொற்றொடர்களும் இருந்தாலும், இந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடிக்கும்.


ஆண்-பெண் சமத்துவம் என்பது வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்பது என் கருத்து. பெண்களுக்கு 30 சதவீதம்..40, 50 என்று அறைகூவும் மனிதர்களும் தன் சொந்த வீட்டில் வசதியாக மறப்பது எப்படியென்று தான் தெரியவில்லை.

என் தோழிகள் பலரும் வீட்டில் ஒரு முகமும் வெளியில் ஒரு முகமும் கொண்டு அவதிப் படுவது கொடுமை. பட்டாம்பூச்சியாக சுற்றிவரும் பெண்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் கூட்டுப்புழுவாய் மாறும் அதிசயம்!..சிலருக்கு திருமணத்திற்குப் பிறகு நல்ல சுதந்திரமோ, இன்னும் மோசமான நிலைக்கோ தள்ளப் படுகின்றனர்.

பெண்கள் படித்தால் முன்னேறி விடுவர் என்பதில் உண்மை உண்டெனினும், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் பார்க்கும் பெரும்பாலோர் வாழும் இந்தியா போன்ற நாடுகளில் குடும்பம் என்ற அடிமைத்தளையில் இருந்து வெளிவந்து கல்வி அறிவைப் பெறவும் பல தடைகள் உள்ளன. அப்படியே தடைதாண்டி வந்தாலும், சுயசிந்தனையை வளர்க்கும் அளவுக்கு நமது கல்வித்தரமும் இருக்கவில்லை. 

இப்போது ஆங்காங்கே சாதனைப் பெண்களைப் பார்த்தாலும், அவர்களும், ஏதாவது ஒரு இடத்திலேனும் பெண் என்பதற்காக பரிகாசத்தையோ, ஏளனத்தையோ கடந்து வர நேர்கிறது.

அனுபவ ரீதியாகக் கூட சொல்ல இயலும். அலுவல் காரணமாக கிராமங்களில் மக்களை சந்திக்கும் போது, ஆண்களே முன்னின்று அதிகாரத் தொனியில் ஆளுவது கண்கூடு. (அதுவும், ஆண் அலுவலர்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம், பெண் அலுவலர்க்கு உடனடியாக கிடைப்பதில்லை). குறிப்பிட்ட தொகுதியில், உள்ளூர் மன்ற உறுப்பினர் (councillor) பெண்ணாக இருக்கவேண்டிய கட்டாயத்தால் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பெண் உறுப்பினரை சமையல் அறையில்தான் பார்க்க முடியும், திருவாளர். கவுன்சிலர் தான் அதிகாரப் பொறுப்பு. கோப்புகளில் கையெழுத்துப் போடுவதும் அவரே. (!!)

பொதுவாக,  விவசாயம், கடல்சார் தொழில்கள், அவை சார்ந்த உபதொழில்களிலும் பெண்களின் பங்கீடு அதிகம் என்பது உண்மை. அதுவும் பருவ நிலை தவறும் போதும், அறுவடைக்கும் மறு உற்பத்திக்கும் இடைப்பட்ட காலங்களிலும், (குறிப்பாக உழவுத்தொழிலாளர்) வருமானத்திற்கு பாடுபடுவது பெண்களே.

பராமரிப்பிலும், வேலையிலும் பாரபட்சம், பாலியல் தொந்தரவுகள், ... இவைகளைத் தாண்டி வெற்றிபெற, முதல் ஆதரவு குடும்பத்தில் இருந்து தொடங்கட்டும்... ஆண்-பெண் சமத்துவம் என்ற போராட்டம் ஒழியும்...

குழந்தை வளர்ப்போடு குடும்பநலனுக்காக பாடுபடும் பெண்களை மதித்து, பொறுப்புக்களைப் பகிர்ந்து சக மனிதனாக உணர்ந்தால் நல்ல சமுதாயம் காண்பது உறுதி.

Friday 2 September 2011

அன்பு பிறந்தநாள்!

அன்புக்கு நாளை பிறந்தநாள்... அவனுக்கு மிகவும் பிடித்த குட்டி  செல்லப் பிராணி, குட்டி நாய்க்குட்டி... ஓவியமாக!!

எல்லா நலன்களும் பெற்று நல்ல மனிதனாய் வாழ வாழ்த்துக்கள், முத்தங்களுடன் அம்மாப்பா

Friday 5 August 2011

சுவிஸில் தமிழர்...

அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது, சுவிஸில் வாழும் தமிழ் இளையர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 7 வயது வரை இலங்கையில் வளர்ந்தவர் அவர். எதேச்சையாக அருகில் அமர்ந்த சில நிமிடங்க‌ளில், அறிமுகப் படுத்திக்கொண்டோம். என்னிடம் கைபேசி இருந்தால் தருமாறும், தன்னிடம் மலேசிய நாணயங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு உதவுமாறும் கேட்டார்... நான் மறுத்து, கைப்பேசி சேவையில் இல்லை என்றுக் கூறி, பத்து ரூபாயை நீட்டினேன். நன்றியுடன் வாங்கி சென்றவர், இலவச தொலைபேசியில் பேசியதாகக் கூறிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்.இலவச சேவையைப் பாராட்டிக் கொண்டார்...(ஆனால், சிறிது நேரம் கழித்து, நான் சென்ற போது மூன்றில் ஒன்று தான் வேலை செய்தது, அதிலும் நீண்ட வரிசை...ம்ம்ம் காசு கொடுத்துப் பேசி நகர்ந்தேன்..!)

முதன்முறையாக‌, இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் கொள்ள வந்ததாகக் கூறினார். அவர் வாயில இருந்து இந்தியாவைப் பத்தி இம்புட்டுத் தான் பேசினார்... ஒன்னுமில்ல போல சொல்றதுக்கு...
  • நான் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லை.. (சினிமாவில் தான் இந்தியாவைத் தெரிந்து வைத்திருந்தாராம், என்ன படம் பார்த்தாரோ?!)
  • சாப்பாடும் அவ்வளவு பிடிக்கவில்லை..
  • ஒரே stress  தான், ஒரு வேளை அலைச்சல் காரணமும் சேர்ந்திருக்கலாம்!!.
  • pizza வுக்காக அலைந்து திரிந்து, கிடைத்ததும் தின்ன‌ச் சகிக்கல. இத்தாலிய cheese  வகையில் செய்தால் தான் நல்லா இருக்கும். (இதையே நம்ம மக்கள் எவ்வளவு ஸ்டைலாக,பந்தாவாக சாப்பிடுறாங்கன்னு பார்த்தாரா? கேக்கல...)
ஈழப் பிரச்சினையைப் பற்றிப் பேசிப் பயனில்லையென்று நினைத்தாரோ என்னவோ, தலைமை சரியில்லை என்றால் அப்படித்தான், ஆர்மிக்காரர்களை அப்படியே வளர்த்து விட்டிருக்கிறார்கள், சாராயமும், பணமும் தாராளமாகக் கொடுத்துப் பெண்களைக் கண்டால் பாயும் விலங்குகளாக...அவர்களை ஒன்றும் சொல்லமுடியாது என்று...

சுவிஸில் த‌மிழ‌ர் நிலை குறித்துக் கூறிய‌து..

த‌மிழ‌ர் வாழ்க்கை ந‌ல்லாவே இருக்கு...சுத‌ந்திர‌மாக‌வும், ச‌ம‌மாக‌வும் ந‌ட‌த்த‌ப் ப‌டுவ‌தாக‌க் கூறினார்...ந‌ல்ல‌ ச‌ம்பாத்திய‌மும் கூட‌..ஆனால், பிழைக்க‌ப் போன‌ இட‌த்தில் ந‌ல்லா ச‌ம்பாரிச்சாலும், புட‌வை க‌ட்டி க‌ழுத்து ம‌றைய‌ ந‌கையைப் போட்டுக் கொண்டுத் திரிந்தால் இட‌ம் கொடுத்த‌வ‌ன், என்ன‌ நினைப்பான் என்று குறைப்ப‌ட்டுக் கொண்டார்.. இங்கே ப‌ர‌வாயில்லை, எளிமையாக‌ ஒரு ந‌கையுட‌ன், பெண்க‌ள் இருக்காங்க‌ன்னு...(அவர், கல்யாண, காதுகுத்து, பூப்பெய்து விழா போஸ்டரைப் பார்க்கலன்னு நினைக்கிறேன், அப்புறம் திருட்டு தொல்லை இல்லைன்னா, நம்ம ஊருல போட்டி போட்டுக்கிட்டு, அள்ளிப் போட்டுட்டு அலைய மாட்டாங்களா?!...)
 இப்போதுள்ள தலைமுறையினருக்கு தமிழ் பேசத் தெரிந்தாலும், படிக்கத் தெரிவதில்லை...மேற்கத்திய கலாச்சாரத்தில் நல்லதைத் தவிர எல்லாத்தையும் பின்பற்றுறாங்க..(இங்க அதவிட மோசம்னு சொல்லல...)

 தமிழன் எங்கு இருந்தாலும் அடிமையாய் இருப்பதை உணர்வதில்லை எளிதில், என்றே நினைக்கிறேன். சுவிஸில், உண்மைத் தமிழனின் நிலை அறிய படியுங்கள், பகிர்ந்துக் கொள்கிறேன், நன்றியுடன்..